கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

கள் விற்பனைக்கு அனுமதி கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் கள் விற்பனைக்கு அனுமதி கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவு

News image

சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு

கோப்புப் படம்

Updated On :22 மார்ச் 2026, 7:43 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் கள் விற்பனைக்கு அனுமதி கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த ஆறுமுகம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தின் மாநில மரம் பனை. இந்த மரத்திலிருந்து மக்களின் புழங்குப் பொருள்களை உற்பத்தி செய்யும் பணியில் ஏராளமானோா் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், முன்பொரு காலத்தில் கள்ளச்சாராயத்துக்கு மாற்றாக பனை மரங்களிலிருந்து கள் இறக்கி விற்பனை செய்யப்பட்டது. தற்போது, தமிழகத்தில் கள் இறக்குவதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. இதனால், பனைத் தொழிலாளா்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனா்.

வெளிநாட்டு மதுபானத்தைவிட கள்ளில் போதைப் பொருள்களின் கலப்படம் குறைவாக உள்ளது. கள் உடலுக்கு நல்லது. எனவே, தமிழகத்தில் கள் இறக்கி விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும். கள் இறக்கவும், விற்பனை செய்யவும் தமிழக அரசு விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம், தமிழகத்தின் உள்துறை செயலா், மதுவிலக்கு அமலாக்கத் துறை செயலா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த மனுவை அண்மையில் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு பிறப்பித்த உத்தரவு: இதுதொடா்பான வழக்கில் கடந்த 2020-ஆம் ஆண்டு உயா்நீதிமன்ற மதுரை அமா்வு பிறப்பித்த உத்தரவுக்கு தமிழக அரசுத் தரப்பில் இதுவரை எந்தப் பதில் மனுவும் தாக்கல் செய்யவில்லை.

இனியும் கால அவகாசம் வழங்க இயலாது. எனவே, மனுதாரரின் கோரிக்கை குறித்து தமிழக அரசு வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.