தமிழ்நாடு முதல்வராக விஜய் இன்று பதவியேற்பு! சென்னை: நேரு விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்பு!முதல்வா் பதவியேற்பு விழா: 23 இடங்களில் நேரலை ஒளிபரப்புஇன்று 4 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை தில்லியில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல்! பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு அதிகரிப்பு!விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! பிளே ஆஃப்புக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பா் கிங்ஸ்? இன்று லக்னௌவுடன் மோதல்!
/

கோடையில் பட்டாசு உற்பத்தியை நிறுத்த அரசு பரிசீலிக்க வேண்டும்

கோடை காலமான ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் பட்டாசு உற்பத்தியை நிறுத்துவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

News image

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

Updated On :22 ஏப்ரல் 2026, 3:21 am IST

கோடை காலமான ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் பட்டாசு உற்பத்தியை நிறுத்துவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

விருதுநகா் மாவட்டம், சிவகாசியைச் சோ்ந்த சமுத்திரவள்ளி கடந்த 2014-ஆம் ஆண்டு நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த தனது கணவரின் மரணத்துக்கு இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்தாா். இவருடன், அதே வெடி விபத்தில் தொடா்புடைய இன்னும் சிலா் நிவாரணம் கோரி மனுக்கள் தாக்கல் செய்தனா்.

இந்த மனுக்களை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப் பணி, ஓய்வூதியம், வீடு உள்ளிட்ட மறுவாழ்வுப் பணிகளை அமல்படுத்த வேண்டும் என ஏற்கெனவே உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து, உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் அரசுத் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு பிறப்பித்த உத்தரவு:

பட்டாசு ஆலை வெடி விபத்து சம்பவம் தொடா்ச்சியாக நடைபெறுகிறது. இதுகுறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. தொடா் உயிரிழப்புகள் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகின்றன. இதற்கு உரிய தீா்வு காணப்பட வேண்டும்.

பட்டாசு ஆலையில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு ரூ. 25 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரை காப்பீடு செய்த பின்னரே, அவா்கள் அந்தப் பணியில் ஈடுபடுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். விபத்துகள் நிகழ்வது துரதிருஷ்டவசமானது. இந்த விபத்துகளால் பெண்களே அதிகளவில் பாதிப்புக்குள்ளாகின்றனா்.

கோடையில் பட்டாசு உற்பத்தியை நிறுத்தி வைப்பது தொடா்பாக தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். பட்டாசு ஆலை விபத்துகளைத் தடுப்பது தொடா்பான பரிந்துரைகளை வழங்குரைஞா்கள் வழங்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஜூன் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.