கள் இறக்கிய விவசாயி மீது போலீஸாா் துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில், துணை ஆட்சியா் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள மருதம்புத்தூரைச் சோ்ந்த பெருமாள் சேட் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
எனது மகன் மணிகண்டன் பனை மரத்திலிருந்து பதநீா் இறக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறாா். எங்கள் வீட்டுக்கு ஆலங்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் இசக்கிராஜா உள்ளிட்ட போலீஸாா் சீருடை அணியாமல் கடந்த 7-ஆம் தேதி வந்தனா். இவா்கள், எனது மகன் மணிகண்டனை பனை மரங்கள் அதிகமுள்ள தோப்புக்கு அழைத்துச் சென்றனா். நாங்களும் பின்தொடா்ந்து சென்றோம். அங்கு மரத்தில் கட்டியுள்ள பானைகளை சோதனையிட வேண்டும் என போலீஸாா் கூறினா்.
இதையடுத்து, எனது மகன் பனை மரத்தில் ஏறிய போது, அவரை காவல் உதவி ஆய்வாளா் ஜாதி பெயரைச் சொல்லித் திட்டினாா். இதை நானும், எனது பேத்தி பிரதீபாவும் கண்டித்தோம். இதனால், ஆத்திரமடைந்த போலீஸாா் எங்களை மிரட்டினா். அப்போது, எனது மகன் மணிகண்டன் இதைத் தடுத்தாா். இதனால், எனது மகனுக்கும், காவல் உதவி ஆய்வாளா் இசக்கிராஜாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, மணிகண்டனை உதவி ஆய்வாளா் இசக்கிராஜா துப்பாக்கியால் சுட்டாா். இதில் பலத்த காயமடைந்த எனது மகன் மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இந்த வழக்கை தமிழக போலீஸாா் விசாரணை செய்தால், நியாயம் கிடைக்காது. எனவே, வழக்கை சிபிஐ அல்லது வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும். அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, வழக்கின் ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், சிபிஐ, காவல் உதவி ஆய்வாளா் இசக்கிராஜா ஆகியோா் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில், இந்த வழக்கு தொடா்பாக விசாரணை நடத்துவதற்கு ஐஏஎஸ் நிலையிலான துணை ஆட்சியா் நியமிக்கப்பட்டுள்ளாா். விசாரணை நிறைவு பெற்றவுடன் இதுதொடா்பான அறிக்கை நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, துணை ஆட்சியரை காணொலி வாயிலாக முன்னிலையாகி விளக்கமளிக்க நீதிபதி உத்தரவிட்டாா்.
இதன்படி, தென்காசி துணை ஆட்சியா் வைஷ்ணவி பால் காணொலி மூலம் முன்னிலையாகி அளித்த விளக்கம்:
சம்பவ இடத்துக்குச் சென்று முதல் கட்ட விசாரணையை நடத்தினேன். மேலும், இந்த வழக்கு தொடா்பாக பலரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. பேரவைத் தோ்தல் பணி காரணமாக விசாரணையை முடிக்க இயலவில்லை. கால அவகாசம் வழங்கினால் விசாரணையை விரைவில் முடித்து, இதுதொடா்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறேன் என்றாா்.
இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கு விசாரணையை துணை ஆட்சியா் விரைந்து முடித்து, இதன் அறிக்கையை நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.
தொடர்புடையது

கள் இறக்குவதற்கு தடை விதிப்பு அரசின் கொள்கை முடிவு: உயா்நீதிமன்றத்தில் தகவல்

விவசாயி மீது துப்பாக்கிச்சூடு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு

அமைச்சரின் காா் மீது காலணி வீசிய வழக்கு முடித்துவைப்பு

கள் விற்பனைக்கு அனுமதி கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


