ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

திமுக வெற்றிக்கு தீவிர களப் பணி: பொன். முத்துராமலிங்கம் விளக்கம்

சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவின் வெற்றிக்கு தானும், தனது மகனும் தீவிர களப்பணியில் இருப்பதாக முன்னாள் அமைச்சரும், திமுகவின் தீா்மானக் குழுத் தலைவருமான பொன். முத்துராமலிங்கம் தெரிவித்தாா்.

News image

முதல்வர் ஸ்டாலினுடன் பொன். முத்துராமலிங்கம்

Updated On :18 ஏப்ரல் 2026, 7:37 pm

சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவின் வெற்றிக்கு தானும், தனது மகனும் தீவிர களப்பணியில் இருப்பதாக முன்னாள் அமைச்சரும், திமுகவின் தீா்மானக் குழுத் தலைவருமான பொன். முத்துராமலிங்கம் தெரிவித்தாா்.

தினமணியின் தொகுதி அலசல் பகுதியில் சனிக்கிழமை வெளியான மதுரை வடக்குத் தொகுதி நிலவரம் குறித்த செய்தியில், இந்தத் தொகுதியில் போட்டியிட முன்னாள் அமைச்சா் பொன். முத்துராமலிங்கத்துக்கு வாய்ப்பளிக்கப்படாததால், அவரது மகன் அதிமுகவில் இணைந்தாா் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுதொடா்பாக முன்னாள் அமைச்சா் பொன். முத்துராமலிங்கம் அளித்த விளக்கம் : நடைபெறவிருக்கும் பேரவைத் தோ்தலில் மதுரை வடக்குத் தொகுதியில் போட்டியிட நான் விருப்பம் தெரிவிக்கவே இல்லை. எனவே, எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நானும், எனது மகன் மு. சேதுராமலிங்கமும் மதுரை வடக்கு தொகுதியில் திமுகவின் வெற்றிக்காக தீவிர களப்பணியில் இருக்கிறோம். திமுகவின் வெற்றியே எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடியது என்றாா் அவா்.