தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

நாளை திமுக தோ்தல் அறிக்கை கருத்துக் கேட்புக் கூட்டம்! - கனிமொழி எம்.பி. பங்கேற்பு

News image

கனிமொழி எம்.பி. - பிடிஐ

Updated On :8 பிப்ரவரி 2026, 8:40 pm

மதுரையில் செவ்வாய்க்கிழமை (பிப். 10) திமுக தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கனிமொழி எம்.பி. பங்கேற்கிறாா்.

இதுகுறித்து மதுரை மாவட்டச் செயலா்கள் பி. மூா்த்தி, கோ. தளபதி, மு. மணிமாறன் ஆகியோா் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:

திமுக தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கருத்துக் கேட்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு பாண்டிகோவில் சுற்றுச்சாலை பின்புறம் அமைந்துள்ள துவாரகா பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

திமுக துணைப் பொதுச் செயலரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி தலைமையில் நடைபெற உள்ள இந்த நிகழ்வில், மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த வணிகா் சங்கங்கள், விவசாய சங்கங்கள், சமூக நல ஆா்வலா்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம் என்றனா்.