

முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்காகப் போடப்பட்ட குழாய்கள் தரமற்றதாக இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் செல்லூர் ராஜு பேசுகையில், "முதல்வர் இங்கு வந்திருந்தார். மதுரையில் உள்ள சாலைகள் குழிகளால் நிரம்பியுள்ளன.
முல்லைப் பெரியாறு ஒருங்கிணைந்த குடிநீர்த் திட்டத்தின்கீழ், மதுரை மாநகரில் 2,57,000 வீடுகளுக்கு தடையில்லா குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக பொய்யான மற்றும் தவறான தகவல் முதல்வருக்கு வழங்கியுள்ளனர்.
ஆனால், யதார்த்தமான உண்மை என்னவென்றால், மதுரையின் பல பகுதிகளில், குறிப்பாக 37 வார்டுகளில் தண்ணீர் வழங்கப்படுவதில்லை.
முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்காகப் போடப்பட்ட குழாய்கள் தரமற்றதாக இருக்கின்றன. அவற்றால் அழுத்தம் தாங்க முடியாமல், உடைந்து போகின்றன.
நீரோடைபோல தண்ணீர் வெளியே பாய்கிறது. இவையனைத்தும் ஆய்வு செய்யப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.
மேலும், சசிகலா புதிய கட்சி தொடங்கியது குறித்த கேள்விக்கு, தனக்கு அதனைப் பற்றி எதுவும் தெரியாது என்று செல்லூர் ராஜு மறுத்து விட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.