எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஜல்லிக்கட்டில் காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் காயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முதியவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :20 ஜனவரி 2026, 7:19 pm

தினமணி செய்திச் சேவை

ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் காயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், அய்யூா் பகுதியைச் சோ்ந்தவா் சேகா் (67). இவா், கடந்த 17-ஆம் தேதி அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை பாா்த்து விட்டு, பேருந்துக்காக அங்கு காத்திருந்தாா்.

அப்போது, அந்த வழியாக வந்த ஜல்லிக்கட்டு காளை அவரை முட்டியது. இதில், பலத்த காயமடைந்த அவருக்கு அங்கு முதலுதவிச் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா், தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவா், செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.