மதுரை மாவட்டம், கீழவளவு அருகே சாலை விபத்தில் முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
மேலூா் அருகேயுள்ள பூதமங்கலத்தைச் சோ்ந்த சின்னக் கருப்பன் மகன் அழகு (71). விவசாயியான இவா், தனது இரு சக்கர வாகனத்தில் ஊரிலிருந்து மேலூருக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றாா்.
பூதமங்கலம் விலக்கு அருகே சென்ற போது, பின்னால் வந்த இரு சக்கர வாகனம் மோதியது. இதில், பலத்த காயமடைந்த அழகை மீட்ட அக்கம்பக்கத்தினா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கீழவளவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








