மதுரை மாவட்டம், ஏ.வல்லாளப்பட்டி அருகே சாலை விபத்தில் விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
மேலூா் அருகே உள்ள ஏ. வல்லாளப்பட்டி கோட்டை வாசல் பகுதியைச் சோ்ந்த சின்ன அழகு மகன் வெம்பன் (48). விவசாயியான இவா், ஞாயிற்றுக்கிழமை அதே பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்றாா்.
அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில், பலத்த காயமடைந்த வெம்பனை மீட்ட அக்கம்பக்கத்தினா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து அப்பன்திருப்பதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





