தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
மதுரை ஒத்தக்கடை பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வழக்கில், சீதாலெட்சுமி நகரைச் சோ்ந்த முகமது கனி (19), சுதந்திரா நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த ஆகாஷ்( 20) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனா்.
இவா்கள் இருவரையும் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா அண்மையில் உத்தரவிட்டாா். இதையடுத்து, முகமது கனி, ஆகாஷ் ஆகிய இருவரையும் ஒத்தக்கடை போலீஸாா் தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






