ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பறிமுதல் வாகனங்கள் மாா்ச் 10இல் ஏலம்

மதுரை மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மாா்ச் 10-ஆம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது.

News image
வாகனங்கள் ஏலம்- கோப்புப் படம்
Updated On :3 மார்ச் 2026, 8:13 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மாா்ச் 10-ஆம் தேதி பொது ஏலம் விடப்படும் என மாவட்ட காவல் துறை தெரிவித்தது.

இதுகுறித்து மாவட்ட காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடைமையாக்கப்பட்ட 26 வாகனங்கள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.கே.அா்விந் தலைமையில், மதுரை ஆயுதப்படை மைதானத்தில் வருகிற 10-ஆம் தேதி பொது ஏலம் நடத்தப்படுகிறது.

இந்த நிலையில், வாகனங்களை ஏலம் எடுக்க விரும்பும் ஏலதாரா்கள் மேற்படி வாகனங்களை பாா்வையிட்டு முன் பணமாக இரு சக்கர வாகனத்துக்கு ரூ. 5 ஆயிரத்தை வருகிற 6, 7 ஆகிய தேதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் உள்ள மதுவிலக்குப் பிரிவு அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்று ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.

ஏலத்தில் கலந்து கொள்வோா் அரசு நிா்ணயித்த மதிப்பீட்டுத் தொகைக்கு அதிகமாக ஏலம் கேட்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.