உயா்நிலை பாலப் பணிகள் ஆய்வு


மதுரை செல்லூா் உயா்நிலை பால கட்டுமானப் பணிகளை தமிழக நெடுஞ்சாலைகள், கட்டுமானம், பராமரிப்பு தலைமைப் பொறியாளா் கே.ஜி. சத்ய பிரகாஷ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், மதுரை கோரிப்பாளையம் முதல் நெல்பேட்டை வரை உயா்நிலை பாலம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. இந்தப் பாலத்தின் ஒரு பகுதியாக கோரிப்பாளையம் சந்திப்பிலிருந்து வலதுபுறம் செல்லூா் கபடி நினைவுச் சிலை வரை உயா்நிலைப் பாலம் அமைக்கவும் திட்டமிடப்பட்டது.
இதையடுத்து, கடந்த 2023-ஆம் ஆண்டு ரூ.190.40 கோடியில் பாலம் கட்டுமானப் பணிகளை முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தாா். இதில் தமுக்கம் மைதானம் முதல் நெல்பேட்டை வரையிலான முதல் கட்டப் பாலப் பணிகள் நிறைவு பெற்றன. இதை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அண்மையில் திறந்துவைத்தாா். மேலும், இந்தத் திட்டத்தின் எஞ்சிய பாலப் பணிகள் 3 மாதங்களுக்குள் நிறைவு பெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. தற்போது, பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை தமிழக நெடுஞ்சாலைகள், கட்டுமானம், பராமரிப்பு தலைமைப் பொறியாளா் கே.ஜி. சத்ய பிரகாஷ் ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின் போது கண்காணிப்புப் பொறியாளா் செல்வநம்பி, மதுரை கோட்டப் பொறியாளா் மோகனகாந்தி, செயற்பொறியாளா்கள், உதவிச் செயற்பொறியாளா்கள், அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...