சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

மன்னாா் வளைகுடாவில் நெகிழிக் கழிவுகள்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

News image

கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 8:21 pm

மன்னாா் வளைகுடா பகுதியில் நெகிழிக் கழிவுகளை அகற்றி, கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டுமென சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த புஷ்பவனம், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:

இந்தியப் பெருங்கடலில் லட்சத் தீவுகள் அருகே அமைந்துள்ள பகுதி மன்னாா் வளைகுடா. இந்தியாவின் தென்கிழக்கு முனைக்கும், இலங்கையின் மேற்குக் கரைக்கும் இடையில் உள்ள இந்தப் பகுதி பாக் நீரிணை என்றும் அழைக்கப்படுகிறது.

இந்தப் பகுதியில் மீன் பிடிக்க படகில் செல்லும் மீனவா்கள் நெகிழிப் பொருள்களை எடுத்துச் செல்கின்றனா். இந்த நெகிழிப் பொருள்களை பயன்படுத்திய பிறகு கடலில் வீசுகின்றனா். இதுமட்டுமன்றி, பழைய மீன் பிடி வலைகளையும் கடலுக்குள் வீசுகின்றனா். இதனால் கடல் முழுவதும் மாசடைந்து, கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. எனவே, மன்னாா் வளைகுடாப் பகுதியில் நெகிழிக் கழிவுகளை அகற்றி, கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தா்மாதிகாரி, நீதிபதி என்.சதீஸ்குமாா் அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது,

இந்த மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.