தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

வனப் பகுதிகளில் காட்டுத் தீ விவகாரம்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் புலிகள் காப்பகங்கள், சரணாலயங்கள், வனப் பகுதிகளில் காட்டுத் தீயைத் தடுக்க நவீன தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

News image

உத்தரவு

Updated On :22 ஏப்ரல் 2026, 8:39 pm

தமிழகத்தில் புலிகள் காப்பகங்கள், சரணாலயங்கள், வனப் பகுதிகளில் காட்டுத் தீயைத் தடுக்க நவீன தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த மணிபாரதி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் கடந்த 2021 முதல் 2025 -ஆம் ஆண்டு வரை வனப் பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்துகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். இதனடிப்படையில், இனி வரும் காலங்களில் தீ விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக, களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம், ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பகம், கொடைக்கானல், கன்னியாகுமரி, மேகமலை விலங்குகள் சரணாலயங்களில் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இதுதவிர, மத்திய அரசின் வன மேலாண்மைத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதியை முறையாகப் பயன்படுத்த வேண்டும். நவீன தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி வனப் பகுதிகளில் ஏற்படும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள தீத் தடுப்பு மேலாண்மைக்கான வழிகாட்டுதல் பரிந்துரைகளை குறிப்பிட்ட கால வரம்புக்குள் செயல்படுத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

வன தீத் தடுப்பு மேலாண்மை வழிகாட்டுதலில் வழங்கப்பட்ட பரிந்துரைகள் தமிழகத்தில் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. இவற்றைப் பின்பற்றினால் காட்டுத் தீ ஏற்படுவதை பெருமளவில் தடுக்கலாம் என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

வழக்கு தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.