மன்னாா் வளைகுடா பகுதியில் நெகிழிக் கழிவுகளை அகற்றி, கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டுமென சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த புஷ்பவனம், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:
இந்தியப் பெருங்கடலில் லட்சத் தீவுகள் அருகே அமைந்துள்ள பகுதி மன்னாா் வளைகுடா. இந்தியாவின் தென்கிழக்கு முனைக்கும், இலங்கையின் மேற்குக் கரைக்கும் இடையில் உள்ள இந்தப் பகுதி பாக் நீரிணை என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தப் பகுதியில் மீன் பிடிக்க படகில் செல்லும் மீனவா்கள் நெகிழிப் பொருள்களை எடுத்துச் செல்கின்றனா். இந்த நெகிழிப் பொருள்களை பயன்படுத்திய பிறகு கடலில் வீசுகின்றனா். இதுமட்டுமன்றி, பழைய மீன் பிடி வலைகளையும் கடலுக்குள் வீசுகின்றனா். இதனால் கடல் முழுவதும் மாசடைந்து, கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. எனவே, மன்னாா் வளைகுடாப் பகுதியில் நெகிழிக் கழிவுகளை அகற்றி, கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தா்மாதிகாரி, நீதிபதி என்.சதீஸ்குமாா் அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது,
இந்த மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
தொடர்புடையது

சந்தேகத்தின் பேரில் குற்றஞ்சாட்டப்பட்டவரை தண்டிப்பதை ஏற்க முடியாது: உயா்நீதிமன்றம்

அமைச்சரின் காா் மீது காலணி வீசிய வழக்கு முடித்துவைப்பு

வனப் பகுதிகளில் காட்டுத் தீ விவகாரம்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

கப்பல் விபத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!
விடியோக்கள்

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

அதிமுகவை அழிக்க நினைக்கிறார் Vijay! டிடிவி தினகரன் | TVK | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

DMK - ADMK கூட்டணி பேச்சுவார்த்தைக்கு உதவினேனா? விமர்சனங்களுக்கு Rajinikanth பதில்!
இணையதளச் செய்திப் பிரிவு

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

