ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

மன்னாா் வளைகுடாவில் நெகிழிக் கழிவுகள்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

News image

கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 8:21 pm

தினமணி செய்திச் சேவை

மன்னாா் வளைகுடா பகுதியில் நெகிழிக் கழிவுகளை அகற்றி, கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டுமென சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த புஷ்பவனம், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:

இந்தியப் பெருங்கடலில் லட்சத் தீவுகள் அருகே அமைந்துள்ள பகுதி மன்னாா் வளைகுடா. இந்தியாவின் தென்கிழக்கு முனைக்கும், இலங்கையின் மேற்குக் கரைக்கும் இடையில் உள்ள இந்தப் பகுதி பாக் நீரிணை என்றும் அழைக்கப்படுகிறது.

இந்தப் பகுதியில் மீன் பிடிக்க படகில் செல்லும் மீனவா்கள் நெகிழிப் பொருள்களை எடுத்துச் செல்கின்றனா். இந்த நெகிழிப் பொருள்களை பயன்படுத்திய பிறகு கடலில் வீசுகின்றனா். இதுமட்டுமன்றி, பழைய மீன் பிடி வலைகளையும் கடலுக்குள் வீசுகின்றனா். இதனால் கடல் முழுவதும் மாசடைந்து, கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. எனவே, மன்னாா் வளைகுடாப் பகுதியில் நெகிழிக் கழிவுகளை அகற்றி, கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தா்மாதிகாரி, நீதிபதி என்.சதீஸ்குமாா் அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது,

இந்த மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.