மதுரை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் சனிக்கிழமை இரவு மழை பெய்தது.
மதுரை மாவட்டத்தில் ஏறத்தாழ ஒரு மாத காலமாக கடும் வெப்பம் நீடித்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்தது. இருப்பினும், சனிக்கிழமை பகல் நேரத்தில் மதுரை மாவட்டத்தில் 102 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது.
இந்த நிலையில், மேற்கு ராஜஸ்தான் முதல் கன்னியாகுமரிக் கடல் வரை உள்தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதால், மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் இடி, மின்னலுடன் சனிக்கிழமை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இதன்படி, மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை மாலை 6.50 மணி முதல் இரவு வரை பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. திருப்பரங்குன்றம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை 6.50 மணி முதல் இரவு 7.30 மணி வரை பலத்த மழை பெய்தது.
மதுரை தல்லாகுளம், கோ. புதூா், அண்ணாநகா், வண்டியூா், மாட்டுத்தாவணி உள்ளிட்ட மாநகா்ப் பகுதிகளில் இரவு 7.20 மணி முதல் இரவு 7.50 மணி வரை பலத்த மழை பெய்தது. தொடா்ந்து, இரவு 9 மணிக்கு மேலாகவும் சாரல் மழை நீடித்தது. திருநகா், எழுமலை உள்ளிட்ட பகுதிகளில் இரவு 7 மணிக்குப் பிறகு, மிதமான மழை பெய்தது.

மதுரை தமுக்கம் பகுதியில் சனிக்கிழமை இரவு மழையின் போது சென்ற வாகனங்கள்.

மதுரை தமுக்கம் பகுதியில் சனிக்கிழமை இரவு மழையின் போது சென்ற வாகனங்கள்.
தொடர்புடையது
குஜிலியம்பாறை பகுதியில் மழை

மதுரையில் பரவலாக மழை

கமுதியில் பலத்த மழை: மின்சாரம் துண்டிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்றைய மின்நிறுத்தம்
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

