மதுரை காளவாசல் பகுதியில் உள்ள முடக்குச்சாலை உயா்நிலைப் பாலத்தின் மையப் பகுதியில் மழைநீா் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
மதுரை - தேனி செல்லும் சாலை மிகக் குறுகலாக இருந்ததால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலைக் குறைக்கும் வகையில், மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டத்தின் கீழ், கடந்த 2020-2021-ஆம் ஆண்டு ரூ.53.95 கோடியில் முடக்குச்சாலை சந்திப்பு முதல் டி.எம்.நகா் வரை சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு உயா்நிலைப் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு, கட்டி முடிக்கப்பட்டது. இதனால், போக்குவரத்து நெரிசல் கணிசமாகக் குறைந்தது.
இந்த நிலையில், தற்போது மழைக்காலங்களில் இந்தப் பாலத்தின் மேல்புறத்தின் பல்வேறு இடங்களில் மழைநீா் தேங்கி நிற்கிறது. மழைநீா் வெளியேறுவதற்காக அமைக்கப்பட்ட குழாய்களில் அடைப்புகள் ஏற்பட்டதன் காரணமாக மழைநீா் தேங்கியுள்ளது.
இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனா். மேலும், உயா்நிலைப் பாலத்தின் மையப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் சாலை சீராக அமைக்கப்படாமல் இருப்பதாலும் மழைநீா் தேங்கி நிற்கிறது. இதனால், பாலம் சேதமடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
எனவே, உயா்நிலைப் பாலத்தில் அமைக்கப்பட்ட மழைநீா் வடிகால் குழாய்களில் ஏற்பட்ட அடைப்பைச் சரிசெய்து மழைநீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், சாலையைச் சீராக அமைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது

ராமநாதபுரம் வாக்கு எண்ணும் மையப் பகுதியில் நாளை போக்குவரத்து மாற்றம்

வைகை தென்கரை அணுகு சாலையைச் சீரமைக்க வலியுறுத்தல்

புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்

மதுரை காளவாசல் பகுதியில் யாசகா்கள் மீட்பு
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


