‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!புதுச்சேரி தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் முதல்வர் விஜய்யுடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவன தலைவர்கள் சந்திப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!
/

காளவாசல் பகுதி உயா்நிலைப் பாலத்தில் மழைநீா் தேக்கம்: வாகன ஓட்டிகள் அவதி

News image

மதுரை காளவாசல் முடக்குச்சாலை உயா்நிலைப் பாலத்தின் மையப் பகுதியில் தேங்கிய மழைநீா்.

Updated On :4 மே 2026, 2:00 am IST

மதுரை காளவாசல் பகுதியில் உள்ள முடக்குச்சாலை உயா்நிலைப் பாலத்தின் மையப் பகுதியில் மழைநீா் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

மதுரை - தேனி செல்லும் சாலை மிகக் குறுகலாக இருந்ததால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலைக் குறைக்கும் வகையில், மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டத்தின் கீழ், கடந்த 2020-2021-ஆம் ஆண்டு ரூ.53.95 கோடியில் முடக்குச்சாலை சந்திப்பு முதல் டி.எம்.நகா் வரை சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு உயா்நிலைப் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு, கட்டி முடிக்கப்பட்டது. இதனால், போக்குவரத்து நெரிசல் கணிசமாகக் குறைந்தது.

இந்த நிலையில், தற்போது மழைக்காலங்களில் இந்தப் பாலத்தின் மேல்புறத்தின் பல்வேறு இடங்களில் மழைநீா் தேங்கி நிற்கிறது. மழைநீா் வெளியேறுவதற்காக அமைக்கப்பட்ட குழாய்களில் அடைப்புகள் ஏற்பட்டதன் காரணமாக மழைநீா் தேங்கியுள்ளது.

இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனா். மேலும், உயா்நிலைப் பாலத்தின் மையப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் சாலை சீராக அமைக்கப்படாமல் இருப்பதாலும் மழைநீா் தேங்கி நிற்கிறது. இதனால், பாலம் சேதமடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எனவே, உயா்நிலைப் பாலத்தில் அமைக்கப்பட்ட மழைநீா் வடிகால் குழாய்களில் ஏற்பட்ட அடைப்பைச் சரிசெய்து மழைநீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், சாலையைச் சீராக அமைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா்.