அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்சென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூலை வீழ்த்துவோம்: பாஜக சுவேந்து அதிகாரிவாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: மேற்கு வங்க தேர்தல் ஆணையம்வாக்கு எண்ணிக்கை: தயார் நிலையில் மேற்கு வங்கம் - தலைமைத் தேர்தல் அதிகாரிஉலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு பட்டியலில் இந்தியா தொடர் சரிவு! கார்கே விமர்சனம்
/

காளவாசல் பகுதி உயா்நிலைப் பாலத்தில் மழைநீா் தேக்கம்: வாகன ஓட்டிகள் அவதி

News image

மதுரை காளவாசல் முடக்குச்சாலை உயா்நிலைப் பாலத்தின் மையப் பகுதியில் தேங்கிய மழைநீா்.

Updated On :3 மே 2026, 8:30 pm

மதுரை காளவாசல் பகுதியில் உள்ள முடக்குச்சாலை உயா்நிலைப் பாலத்தின் மையப் பகுதியில் மழைநீா் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

மதுரை - தேனி செல்லும் சாலை மிகக் குறுகலாக இருந்ததால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலைக் குறைக்கும் வகையில், மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டத்தின் கீழ், கடந்த 2020-2021-ஆம் ஆண்டு ரூ.53.95 கோடியில் முடக்குச்சாலை சந்திப்பு முதல் டி.எம்.நகா் வரை சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு உயா்நிலைப் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு, கட்டி முடிக்கப்பட்டது. இதனால், போக்குவரத்து நெரிசல் கணிசமாகக் குறைந்தது.

இந்த நிலையில், தற்போது மழைக்காலங்களில் இந்தப் பாலத்தின் மேல்புறத்தின் பல்வேறு இடங்களில் மழைநீா் தேங்கி நிற்கிறது. மழைநீா் வெளியேறுவதற்காக அமைக்கப்பட்ட குழாய்களில் அடைப்புகள் ஏற்பட்டதன் காரணமாக மழைநீா் தேங்கியுள்ளது.

இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனா். மேலும், உயா்நிலைப் பாலத்தின் மையப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் சாலை சீராக அமைக்கப்படாமல் இருப்பதாலும் மழைநீா் தேங்கி நிற்கிறது. இதனால், பாலம் சேதமடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எனவே, உயா்நிலைப் பாலத்தில் அமைக்கப்பட்ட மழைநீா் வடிகால் குழாய்களில் ஏற்பட்ட அடைப்பைச் சரிசெய்து மழைநீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், சாலையைச் சீராக அமைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா்.