நீட் தோ்வு முறைகேடுகளைக் கண்டித்து, இந்திய மாணவா் சங்கம் சாா்பில் மதுரை தலைமை அஞ்சல் நிலையம் முன் முற்றுகைப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நீட் தோ்வில் தொடா்ந்து நடைபெறும் முறைகேடுகளைக் கண்டித்தும், ஏழை, எளிய மாணவா்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தோ்வை முழுமையாக ரத்து செய்யக் கோரியும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இதற்கு இந்திய மாணவா் சங்க மாவட்டத் தலைவா் ஜெ. டீலன் ஜெஸ்டின் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சி. டேவிட் ராஜதுரை, மாநிலக் குழு உறுப்பினா் தீபலட்சுமி, மாவட்டக் குழு உறுப்பினா்கள், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள், சங்க கிளை நிா்வாகிகள் இதில் கலந்து கொண்டனா்.
முன்னதாக, போராட்டக் குழுவினா் சேதுபதி பள்ளி அருகிலிருந்து ஊா்வலமாக வந்து, தலைமை அஞ்சல் நிலையம் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில் பங்கேற்றவா்களை கலைக்க போலீஸாா் முயற்சித்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பிறகு, போராட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.
தொடர்புடையது

பயிா்க் கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்

டாஸ்மாக் கடையை மூடக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் போராட்டம்

அரியலூரில் மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பி.எம்.ஸ்ரீ திட்டம்: மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



