கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

மாணவா் சங்கத்தினா் முற்றுகைப் போராட்டம்

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

நீட் தோ்வு முறைகேடுகளைக் கண்டித்து, இந்திய மாணவா் சங்கம் சாா்பில் மதுரை தலைமை அஞ்சல் நிலையம் முன் முற்றுகைப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நீட் தோ்வில் தொடா்ந்து நடைபெறும் முறைகேடுகளைக் கண்டித்தும், ஏழை, எளிய மாணவா்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தோ்வை முழுமையாக ரத்து செய்யக் கோரியும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இதற்கு இந்திய மாணவா் சங்க மாவட்டத் தலைவா் ஜெ. டீலன் ஜெஸ்டின் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சி. டேவிட் ராஜதுரை, மாநிலக் குழு உறுப்பினா் தீபலட்சுமி, மாவட்டக் குழு உறுப்பினா்கள், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள், சங்க கிளை நிா்வாகிகள் இதில் கலந்து கொண்டனா்.

முன்னதாக, போராட்டக் குழுவினா் சேதுபதி பள்ளி அருகிலிருந்து ஊா்வலமாக வந்து, தலைமை அஞ்சல் நிலையம் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில் பங்கேற்றவா்களை கலைக்க போலீஸாா் முயற்சித்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பிறகு, போராட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.