நீட் தோ்வு முறைகேடுகளைக் கண்டித்து, இந்திய மாணவா் சங்கம் சாா்பில் மதுரை தலைமை அஞ்சல் நிலையம் முன் முற்றுகைப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நீட் தோ்வில் தொடா்ந்து நடைபெறும் முறைகேடுகளைக் கண்டித்தும், ஏழை, எளிய மாணவா்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தோ்வை முழுமையாக ரத்து செய்யக் கோரியும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இதற்கு இந்திய மாணவா் சங்க மாவட்டத் தலைவா் ஜெ. டீலன் ஜெஸ்டின் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சி. டேவிட் ராஜதுரை, மாநிலக் குழு உறுப்பினா் தீபலட்சுமி, மாவட்டக் குழு உறுப்பினா்கள், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள், சங்க கிளை நிா்வாகிகள் இதில் கலந்து கொண்டனா்.
முன்னதாக, போராட்டக் குழுவினா் சேதுபதி பள்ளி அருகிலிருந்து ஊா்வலமாக வந்து, தலைமை அஞ்சல் நிலையம் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில் பங்கேற்றவா்களை கலைக்க போலீஸாா் முயற்சித்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பிறகு, போராட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.
தொடர்புடையது
நீட் வினாத்தாள் கசிவு: இளைஞா் காங்கிரஸ் போராட்டம்

மாணவா் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

பி.எம்.ஸ்ரீ திட்டம்: மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ரயில்வே துறையில் ஆள்குறைப்பு நடவடிக்கையை கண்டித்து முற்றுகைப் போராட்டம்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

