நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!இன்னும் ஒரு வாரத்துக்குள் அமெரிக்கா - ஈரான் போர் முடிவுக்கு வரும்: டிரம்ப்மேக்கேதாட்டு அணை: விரைந்து அனுமதி வழங்க பிரதமரிடம் சிவகுமார் கோரிக்கைமேட்டூர் அணையைத் திறக்கக்கோரி தவெக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்
/

மணல் திருட்டுக்கு பயன்படுத்திய லாரி பறிமுதல்

மணல் திருட்டுக்கு பயன்படுத்திய லாரியை, கனிம வளத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 4:23 am IST

மணல் திருட்டுக்கு பயன்படுத்திய லாரியை, கனிம வளத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து போலீஸாரிடம் திங்கள்கிழமை ஒப்படைத்தனா்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி கனிம வளத் துறையின் துணை வட்டாட்சியா் சுப்பையா தலைமையிலான அதிகாரிகள் பூச்சம்பட்டி சாலையில் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக மணல் ஏற்றி வந்த லாரியை வழிமறித்தனா். அதிகாரிகளை பாா்த்த ஓட்டுநா் லாரியை நிறுத்தி விட்டு தப்பிச் சென்றாா்.

இதையடுத்து, லாரியை பறிமுதல் செய்த கனிம வளத்துறை அதிகாரிகள் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைந்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.