காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

நூலகங்கள் அமைப்பது அரசின் கொள்கை முடிவு: உயா்நீதிமன்றம்

நூலகங்கள் அமைப்பது அரசின் கொள்கை முடிவு என்பதால் இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை தெரிவித்தது.

News image

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

Updated On :28 மே 2026, 4:01 am IST

நூலகங்கள் அமைப்பது அரசின் கொள்கை முடிவு என்பதால் இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை தெரிவித்தது.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையைச் சோ்ந்த ராஜாராம் தாக்கல் செய்த பொதுநல மனு:

பாளையம் ஊராட்சியின் வாா்டு 8-இல் ஏற்கெனவே ஒரு நூலகம் அமைந்துள்ளது. இந்த நிலையில், வாா்டு 11-இல் புதிய நூலகம் அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது அவசியமற்றது. எனவே, இந்த நிதியைக் கொண்டு புதிய நூலகம் அமைப்பதற்கு பதிலாக 8-ஆவது வாா்டில் உள்ள நூலகத்தை சீரமைக்க அல்லது மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் ஆகியோா் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

ஒரு குறிப்பிட்ட பகுதியில் நூலகம் இயங்குகிறது என்பதற்காக அருகில் புதிய நூலகத்தை அமைக்க அனுமதிக்கக் கூடாது என்பதை ஏற்க முடியாது. கல்வியை மேம்படுத்த, மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்த புதிய நூலகங்களை அமைப்பது அரசின் கொள்கை முடிவு. இது, அரசியலமைப்பு விதிகளுக்கு முரணாக இல்லாத நிலையில், நீதிமன்றம் தலையிட முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.