பழனி அடிவாரத்தில் ஜேப்படியில் ஈடுபட்டதாக இருவரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
புது ஆயக்குடி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி மகன் முருகேசன் (42). இவர் சரவணப் பொய்கை அருகே நடந்து சென்றபோது, தில்லையாடி வள்ளியம்மை தெருவைச் சேர்ந்த தன்னாசி மகன் சின்னகருப்பன் (42), மதினா நகர் இஸ்மாயில் மகன் ஜாபர்சாதிக் (34) ஆகியோர் முருகேசன் பாக்கெட்டில் இருந்த பணத்தை ஜேப்படி செய்ததாகக் கூறப்படுகிறது.
அக்கம்பக்கத்தினர் இருவரையும் பிடித்து அடிவாரம் போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







