குடிநீர் வழங்கக் கோரியும், தனியார் குடிநீர் சுத்திகரிப்பு ஆலையை மூடக் கோரியும் திண்டுக்கல் அருகே பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் அடுத்துள்ள பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சிக்குள்பட்ட அபிராமிநகர், டான்பொஸ்கோ நகர், பாத்திமாநகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 6 மாதங்களாக சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம். அப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் குடிநீர் சுத்திகரிப்பு ஆலை, அதிக அளவு நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதாலேயே, பொதுமக்களுக்கான ஆழ்துளை கிணறுகள் வறண்டதாக புகார் எழுந்தது.
இந்நிலையில் தனியார் குடிநீர் ஆலையை மூடக் கோரியும், பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் செய்யக் கோரியும் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் காலி குடங்களுடன் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். மாலைப்பட்டி சாலையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீஸார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். விரைவில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதாக உறுதி அளித்ததை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கார்த்திகை தீபம் தொடரில் பாண்டவர் இல்லம் நடிகை!

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

ஹலோகிராமில் விஜய் உருவம்... தவெக வேட்பாளர் நூதன பிரசாரம்!

100% வாக்குப் பதிவு: கோவையில் இந்திய துணை தேர்தல் ஆணையர் ஆய்வுக் கூட்டம்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

