பழனி அருகே வியாழக்கிழமை அணையில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்தார்.
பழனியை அடுத்த பாப்பம்பட்டியைச் சேர்ந்தவர் சின்னான் என்ற கருப்புச்சாமி (60). இவர் வியாழக்கிழமை பாப்பம்பட்டியை அடுத்த குதிரையாறு அணைக்கு குளிக்கச் சென்றார். அப்போது அணை நீரில் தவறி விழுந்து அவர் உயிரிழந்தார். அவரது சடலத்தை தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் மீட்டனர்.
இதுகுறித்து பழனி தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.