முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் கவனத்திற்கு...

வங்கி  போட்டித் தேர்வில் வெற்றி பெறும் முன்னாள் படை வீரர்களின் வாரிசுகளுக்கு, தனியார் பயிற்சி மையத்தில் பயின்றதற்கான கட்டணத் தொகை
Updated on
1 min read

வங்கி  போட்டித் தேர்வில் வெற்றி பெறும் முன்னாள் படை வீரர்களின் வாரிசுகளுக்கு, தனியார் பயிற்சி மையத்தில் பயின்றதற்கான கட்டணத் தொகை அதிகபட்சமாக ரூ.5ஆயிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்திருப்பதாவது: வங்கி பணிக்கான போட்டி தேர்வு டிச.2, 3, 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இத்தேர்வில் பங்கேற்கும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் தேர்ச்சி பெற்றால், தனியார் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து படித்ததற்கான கட்டணத் தொகை வழங்கப்படும்.  தேர்ச்சி பெற்றதற்கான அசல் சான்று மற்றும் பயின்ற பயிற்சி நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட அசல் ரசீது ஆகியவற்றுடன், திண்டுக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நலத்துறை உதவி இயக்குநரிடம் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். விதிமுறைகளுக்குள்பட்டு ரசீதில் உள்ள தொகை (அல்லது) அதிகபட்ச பயிற்சி கட்டணத் தொகையாக ரூ.5,000 வழங்கப்படும். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, வங்கிப் போட்டித் தேர்வுகளில் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் அதிக அளவில் தேர்ச்சி பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com