கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

கொடைக்கானல் ஏரிச்சாலைக்கு குப்பைத் தொட்டிகள் வழங்கல்

கொடைக்கானலில் ரோட்டரி கிளப் சார்பில் குப்பைத் தொட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On :5 ஏப்ரல் 2018, 8:56 am IST

கொடைக்கானலில் ரோட்டரி கிளப் சார்பில் குப்பைத் தொட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
   கொடைக்கானல் ஏரிச்சாலை பகுதியில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவதால் அப் பகுதிகளில் குப்பைகள் அதிகம் தேங்க வாய்ப்புள்ளது. இதனால் கொடைக்கானல் நகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் ஏரிச்சாலையை சுற்றி கூடுதலாக குப்பைத் தொட்டிகள் வைக்க வேண்டும் என கொடைக்கானல் சுழற் சங்கதத்திற்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து கொடைக்கானல் சுழற் சங்கம் சார்பில் குப்பைத் தொட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் ரோகன் சாம்பாபு தலைமை வகித்தார். சங்க ஆளுநர் கோபாலகிருஷ்ணன் புதிய குப்பைத் தொட்டிகளை சமூக ஆர்வலர்களுக்கு வழங்கினார். இந் நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள்,சமூக ஆர்வலர்கள்,ஏரிச்சாலை வியாபாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். செயலர் ராஜ்குமார் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.