திண்டுக்கல் அருகே மாட்டு வியாபாரி கொலை வழக்கில் தொடர்புடைய அண்ணன், தம்பி இருவரை, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், விஎஸ்.கோட்டை அடுத்துள்ள மார்க்கம்பட்டியைச் சேர்ந்தவர் மு.சக்தி என்ற சக்திவேல் (50). இவரது சகோதரர் பாண்டி என்ற பாண்டியன் (49). கடந்த பிப்ரவரி மாதம், அதே பகுதியைச் சேர்ந்த மாட்டு வியாபாரி அம்பல்ராஜ் என்பவரை கொலை செய்த வழக்கில், அண்ணன், தம்பி இருவரையும் சாணார்பட்டி போலீஸார் கைது செய்து, திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், சக்திவேல் மற்றும் பாண்டி இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.சக்திவேல் பரிந்துரை செய்ததை ஏற்று, மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் அதற்கான உத்தரவை புதன்கிழமை பிறப்பித்துள்ளார். இதனை அடுத்து, திண்டுக்கல் சிறையில் இருந்த இருவரும், மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பை: ஸ்மிருதி மந்தனா அரைசதம்; பாகிஸ்தானுக்கு 171 ரன்கள் இலக்கு!

மக்களை நாய் என்றேனா? என் தாய்க்கு இணையானவர்கள் : ராகவா லாரன்ஸ்

விக்ரமின் சியான் 63 படப்பிடிப்பு - புகைப்படங்கள்

அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை: ஈரான்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


