இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

மாட்டு வியாபாரி கொலை: அண்ணன், தம்பி குண்டர் சட்டத்தில் கைது

திண்டுக்கல் அருகே மாட்டு வியாபாரி கொலை வழக்கில் தொடர்புடைய அண்ணன், தம்பி இருவரை, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் உத்தரவிட்டுள்ளார்.

Updated On :5 ஏப்ரல் 2018, 9:39 am IST

திண்டுக்கல் அருகே மாட்டு வியாபாரி கொலை வழக்கில் தொடர்புடைய அண்ணன், தம்பி இருவரை, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், விஎஸ்.கோட்டை அடுத்துள்ள மார்க்கம்பட்டியைச் சேர்ந்தவர் மு.சக்தி என்ற சக்திவேல் (50). இவரது சகோதரர் பாண்டி என்ற பாண்டியன் (49). கடந்த பிப்ரவரி மாதம், அதே பகுதியைச் சேர்ந்த மாட்டு வியாபாரி அம்பல்ராஜ் என்பவரை கொலை செய்த வழக்கில், அண்ணன், தம்பி இருவரையும் சாணார்பட்டி போலீஸார் கைது செய்து, திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், சக்திவேல் மற்றும் பாண்டி  இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.சக்திவேல் பரிந்துரை செய்ததை ஏற்று, மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் அதற்கான உத்தரவை புதன்கிழமை பிறப்பித்துள்ளார். இதனை அடுத்து, திண்டுக்கல் சிறையில் இருந்த இருவரும், மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.