சாகித்ய அகாதெமி தமிழ் குழு உறுப்பினராக காந்தி கிராம பல்கலை. பேராசிரியர் பா.ஆனந்தகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து காந்தி கிராம பல்கலை. சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: மத்திய அரசின் உயர்மட்ட இலக்கிய அமைப்பான சாகித்ய அகாதெமியின் தமிழ் குழு உறுப்பினராக பா.ஆனந்தக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 3 ஆண்டுகளுக்கு தமிழ் குழுவின் உறுப்பினராகச் செயல்படுவார். மலையாள மொழியிலிருந்து "யந்திரம்' என்ற நாவலைத் தமிழில் மொழிபெயர்த்ததற்காக கடந்த 2008 ஆம் ஆண்டு மொழிபெயர்ப்பிற்கான பிரிவில் சாகித்ய அகாதெமி விருது ஆனந்தகுமாருக்கு கிடைத்துள்ளது.
இவர் 25-க்கும் மேற்பட்ட நூல்களையும், 100-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். தற்போது சாகித்ய அகாதெமி தமிழ் குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆனந்தக்குமாருக்கு துணைவேந்தர் சு.நடராஜன், பதிவாளர் விபிஆர் சிவக்குமார் மற்றும் தமிழத்துறைப் பேராசிரியர்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2026 - கும்பம்
காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்! வெய்யிலில் காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம்!
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2026 - மகரம்

ஒரு நாளைக்கு 100 - 150 சிக்ஸர்கள்; ஹெலிகாப்டர் ஷாட் குறித்தும் பேசிய முகுல் சௌதரி!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

