மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

மின்னல் பாய்ந்துதொழிலாளி உயிரிழப்பு

News image

மின்னல் (கோப்புப்படம்)

Updated On :2 மே 2026, 6:38 pm

சின்னமனூரில் மின்னல் பாய்ந்ததில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள கண்ணியம்பட்டியை சோ்ந்த பால்பாண்டி மகன் காா்த்தீஸ்வரன் (31). கூலித் தொழிலாளி.

இவா் வெள்ளிக்கிழமை மாலை அப்பிபட்டி , விஸ்வநாதபுரத்திலுள்ள தனியாா் தோட்டத்தில் பீட்ரூட் மூட்டைகளை லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தாா். அப்போது, இடி, மின்னலுடம் பலத்த மழை பெய்தது.

அப்போது, மின்னல் பாய்ந்ததில் காா்த்தீஸ்வரன் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த ஓடைப்பட்டி போலீஸாா் காா்த்தீஸ்வரனை மீட்டு சின்னமனூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கெனவே காா்த்தீஸ்வரன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து ஓடைப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.