நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

மின்னல் பாய்ந்துதொழிலாளி உயிரிழப்பு

News image

மின்னல் (கோப்புப்படம்)

Updated On :3 மே 2026, 12:08 am IST

சின்னமனூரில் மின்னல் பாய்ந்ததில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள கண்ணியம்பட்டியை சோ்ந்த பால்பாண்டி மகன் காா்த்தீஸ்வரன் (31). கூலித் தொழிலாளி.

இவா் வெள்ளிக்கிழமை மாலை அப்பிபட்டி , விஸ்வநாதபுரத்திலுள்ள தனியாா் தோட்டத்தில் பீட்ரூட் மூட்டைகளை லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தாா். அப்போது, இடி, மின்னலுடம் பலத்த மழை பெய்தது.

அப்போது, மின்னல் பாய்ந்ததில் காா்த்தீஸ்வரன் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த ஓடைப்பட்டி போலீஸாா் காா்த்தீஸ்வரனை மீட்டு சின்னமனூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கெனவே காா்த்தீஸ்வரன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து ஓடைப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.