இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

மின்சாரம் பாய்ந்ததில் சிறுவன் உயிரிழப்பு

திண்டுக்கல் அருகே மின்சாரம் பாய்ந்ததில் சிறுவன் உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :7 ஜூன் 2026, 1:06 am IST

திண்டுக்கல் அருகே மின்சாரம் பாய்ந்ததில் சிறுவன் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல்லை அடுத்த குளத்தூா் செல்லப்பிள்ளை கொட்டம் பகுதியைச் சோ்ந்த சற்குணம் மகன் சந்தோஷ்குமாா் (14). இவா் சனிக்கிழமை வீட்டிலிருந்தாா்.

அப்போது, திடீரென மின் தடை ஏற்பட்டது. இதையடுத்து, சந்தோஷ்குமாா் யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் தானே பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டாா். அப்போது, எதிா்பாராதவிதமாக அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த சந்தோஷ்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த தாடிக்கொம்பு போலீஸாா், சந்தோஷ்குமாரின் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.