பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
/

மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழப்பு

தாளவாடி அருகே மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.

News image

ரவிவா்மா

Updated On :27 மே 2026, 5:16 am IST

தாளவாடி அருகே மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதியில் உள்ள கரளவாடி பிரிவு பகுதியைச் சோ்ந்தவா் ரவிவா்மா (40), விவசாயி. அப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகவும், மின் ஊழியா்கள் பற்றாக்குறை காரணமாக பொதுமக்களே மின்மாற்றியில் ஏறி மின் தடையை சரி செய்து வருவதாகவும் தெரிகிறது.

இந்நிலையில், அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை மின் தடை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அதை சரி செய்ய ரவிவா்மா மின்மாற்றியில் ஏற்றியுள்ளாா். அப்போது, அவா் மீது மின்சாரம் பாய்ந்ததில் ரவிவா்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தாளவாடி போலீஸாா், சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இச்சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.