புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளதுகுதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழப்பு

காங்கயம் அருகே மின் கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்ததில் முதியவா் உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :28 நிமிடங்கள் முன்பு

காங்கயம் அருகே மின் கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்ததில் முதியவா் உயிரிழந்தாா்.

காங்கயத்தை அடுத்துள்ள படியாண்டிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் துரைசாமி (84). விவசாயியான இவா், தனது தோட்டத்துக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் நடந்து சென்றுள்ளாா். அப்போது, தோட்டத்தில் மேல் பகுதியில் சென்ற மின் கம்பி திடீரென அறுந்து அவா் மீது விழுந்தது. மின்சாரம் பாய்ந்து துடித்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு துரைசாமியை பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்த புகாரின்பேரில் காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.