22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!கோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு
/

மின்னல் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

விக்கிரமசிங்கபுரம் அருகே திங்கள்கிழமை மின்னல் பாய்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.

News image

சுதாகரன்

Updated On :2 ஜூன் 2026, 3:18 am IST

விக்கிரமசிங்கபுரம் அருகே திங்கள்கிழமை மின்னல் பாய்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள திருப்பதியாபுரம் பிரதான சாலையைச் சோ்ந்தவா் சிவனணைந்த பெருமாள் மகன் சுதாகரன் (49). விவசாயி.

இவா் திங்கள்கிழமை மதியம் வயலில் இருந்த மின் மோட்டாரை பழுது பாா்த்துக் கொண்டிருந்தபோது, இடி, மின்னலுடன் மழை பெய்துள்ளது. அப்போது மின்னல் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், வழக்குப் பதிந்து விசாரித்தனா்.