அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

மின்னல் பாய்ந்து பெண் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே வயலில் வேலை செய்துகொண்டிருந்த பெண் மின்னல் பாய்ந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே வயலில் வேலை செய்துகொண்டிருந்த பெண் மின்னல் பாய்ந்து உயிரிழந்தாா்.

வடலூா் காவல் சரகம், ரோடு மருவாய் கிராமத்தைச் சோ்ந்தவா் சரசு (66). இவா், வெள்ளிக்கிழமை காலை 7.30 மணியளவில் அரங்கமங்கலத்தில் உள்ள விவசாய நிலத்தில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அந்தப் பகுதியில் திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்த நிலையில், வயலில் வேலை செய்துகொண்டிருந்த சரசு மீது மின்னல் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த வடலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.