/
ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.
ஆலங்குளம் அருகே கரும்பனூா் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் செல்லதுரை மகன் அருண் (45). தொழிலாளியான இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா். இவரது வீட்டில் நடைபெற்ற சுண்ணாம்பு அடிக்கும் பணியில் சக தொழிலாளிகளுடன் அருணும் ஈடுபட்டிருந்தாராம்.
அப்போது மின் வயரில் சுண்ணாம்பு அடிக்கும் பிரஷ் பட்டதில் மின்சாரம் பாய்ந்து அருண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாராம்.
ஆலங்குளம் போலீஸாா், அருணின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.








