பழனி அருகே சனிக்கிழமை இரவு நியாய விலைக்கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் சீனி, அரிசி, பாமாயில் போன்ற பொருள்களை திருடிச் சென்றனர்.
பழனியை அடுத்த கோதைமங்கலத்தில் பழனி- பழைய தாராபுரம் சாலையில் பழனி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் 8ஆம் எண் நியாய விலைக் கடை இயங்கி வருகிறது. இக்கடையில் ராஜாமணி விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சனிக்கிழமை வழக்கம் போல கடையை அடைத்து விட்டு ராஜாமணி சென்றுள்ளார். ஞாயிற்றுக்கிழமை கடை திறந்து கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து ராஜாமணி அங்கு வந்து பார்த்த போது பூட்டை உடைத்து உள்ளே இருந்த சீனி, அரிசி, பாமாயில் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது.
திருடப்பட்ட பொருள்களின் எடை சுமார் 600 கிலோ ஆகும். இதுகுறித்து பழனி தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஷாபாஸ் ஷெரீஃப், அசீம் முனீா் பரிந்துரை!

தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்

நிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்பு

திசைதிருப்பும் அரசியலில் பாஜக ஈடுபடுகிறது: இளைஞா் காங்கிரஸ் குற்றச்சாட்டு
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

