கொடைக்கானல் அருகே குண்டுபட்டியில் இலவச மகப்பேறு மற்றும் பொது மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
வத்தலகுண்டு லியோனார்டு மருத்துவமனை மற்றும் தீபகம் நலவாழ்வு மையம் இணைந்து நடத்திய இம் முகாமில் அருட்சகோதரி தங்கம் வரவேற்றார். மருத்துவர் வசந்தா தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் கர்ப்பிணிப் பெண்கள், மகப்பேறு பிரச்னை உடையவர்கள் மற்றும் பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆலோசனை மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டன.
மேலும் பல், கண் பரிசோதனை, ரத்த அழுத்தம், இருதய நோய், சிறுநீரக பாதிப்பு, மூலம், ஆஸ்த்துமா, சளி, இருமல் உள்ளிட்ட நோய்களுக்கு மருத்துவம் பார்க்கப்பட்டு ஆலோசனைகள் மற்றும் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.
முகாமில் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். முகாமில் 20-க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் 25-க்கும் மேற்பட்ட தீபகம் தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர். அருட் சகோதரி மேரி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெற்றியைத் தீர்மானிக்கும் பெண்கள்

நோயற்ற மனிதன்; போரற்ற உலகம்!
வாய்ப்புகள் வழங்கும் ஒப்பந்தம்!

சபலென்காவை சாய்த்தாா் பாப்டிஸ்ட்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

