திண்டுக்கல் மேட்டுப்பட்டி பாஸ்கு திருவிழாவில் உயிர்த்த ஏசுவின் ரத பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை திருத்தலத்தில் 328ஆம் ஆண்டு பாஸ்கு திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தூம்பா ஊர்வலம் சனிக்கிழமை அதிகாலை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, உதவிப் பங்குத்தந்தை சேசுதாஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் உயிர்த்த ஆண்டவரின் ரத பவனி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. முன்னதாக திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி நற்கருணை ஆசி வழங்கினார். அதனைத் தொடர்ந்து ரத பவனியை வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன் தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வெற்றிலை சர்பத்

குட்டித் தூக்கம் போடுபவர்களுக்காக போட்டி நடத்திய தென் கொரியா!

நமன் திர் அரைசதம்; சிஎஸ்கேவுக்கு 160 ரன்கள் இலக்கு!
பிருத்விராஜின் கலிஃபா வெளியீட்டுத் தேதி!
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

