திண்டுக்கல் மாவட்டத்தில் மெட்ரிக்குலேஷன், மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மொத்தம் 2,975 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
இது தொடர்பாக, திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ச. கோபிதாஸ் தெரிவித்துள்ளது: 14 வயதுக்குள்பட்ட அனைத்து மாணவர்களும் கல்வி பெறவேண்டும் என்ற அடிப்படையில், 2013-14 ஆம் கல்வி ஆண்டு முதல் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, சிறுபான்மையினர் நிர்வாகத்தில் அல்லாத அனைத்து தனியார் பள்ளிகளிலும் நுழைவு வகுப்புகளில் 25 சதவீத இடம் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
2018-19ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, ஏப்ரல் 20 முதல் மே 18ஆம் தேதி வரை ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 91 மெட்ரிக். பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்புகளில் 1,261 இடங்கள் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் நிரப்பப்பட உள்ளன.
அதேபோல், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலக நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 125 மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் மொத்தம் 1,714 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
எனவே, நலிவடைந்த மற்றும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பிரிவினருக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டினை, தகுதிவாய்ந்த பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்பு!
திருச்சி செல்கிறார் முதல்வர் விஜய்! விமான நிலையத்திலிருந்து சாலைவலம்!
பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மீண்டும் போர் தொடங்கும்: டிரம்ப்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர் அரிவாள் வெட்டு சம்பவம்: ஒருவர் சுட்டுப் பிடிப்பு!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


