தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

25 சதவீத இட ஒதுக்கீடு: திண்டுக்கல் மாவட்டத்தில் 2,975 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை

திண்டுக்கல் மாவட்டத்தில் மெட்ரிக்குலேஷன், மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மொத்தம் 2,975 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. 

Updated On :18 ஏப்ரல் 2018, 8:11 am IST

திண்டுக்கல் மாவட்டத்தில் மெட்ரிக்குலேஷன், மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மொத்தம் 2,975 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. 
இது தொடர்பாக, திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ச. கோபிதாஸ் தெரிவித்துள்ளது:  14 வயதுக்குள்பட்ட அனைத்து மாணவர்களும் கல்வி பெறவேண்டும் என்ற அடிப்படையில், 2013-14 ஆம் கல்வி ஆண்டு முதல் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
அதன்படி, சிறுபான்மையினர் நிர்வாகத்தில் அல்லாத அனைத்து தனியார் பள்ளிகளிலும் நுழைவு வகுப்புகளில் 25 சதவீத இடம் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
2018-19ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, ஏப்ரல் 20 முதல் மே 18ஆம் தேதி வரை ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 91 மெட்ரிக். பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்புகளில் 1,261 இடங்கள் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் நிரப்பப்பட உள்ளன. 
அதேபோல், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலக நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 125 மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் மொத்தம் 1,714 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
     எனவே, நலிவடைந்த மற்றும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பிரிவினருக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டினை, தகுதிவாய்ந்த பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.