மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் சிறப்பாக பணிபுரிந்த 29 பேருக்கு பரிசு

திண்டுக்கல் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் சிறப்பாக பணிபுரிந்த ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட 29 பேருக்கு, புதன்கிழமை பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Updated On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

திண்டுக்கல் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் சிறப்பாக பணிபுரிந்த ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட 29 பேருக்கு, புதன்கிழமை பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு,  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின், திண்டுக்கல் மண்டல தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மண்டல பொது மேலாளர் சி.ராஜேஸ்வரன் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.
விழாவில், 10 மற்றும் 12ஆம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற பணியாளர்களின் குழந்தைகள், பி.கே.சக்திவேல் தங்கபாண்டியன், ஏ.அபர்ணா, யு.ஹரிஸ்பாண்டி மற்றும் கே.மோகனபிரசாத், எஸ்.எம்.புவனேஸ், வி.சினேகா ஆகியோருக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, பேருந்து இயக்கத்தின்போது டீசலை சிக்கனமாகப் பயன்படுத்திய திண்டுக்கல் மண்டலத்தைச் சேர்ந்த 12 ஓட்டுநர்கள், அதிக வருவாய் ஈட்டிய 12 நடத்துநர்கள், தொழில்நுட்ப பணியாளர், அலுவலக மேற்பார்வையாளர் உள்ளிட்ட 29 பேருக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், 12 ஓட்டுநர்கள், 34 நடத்துநர்களுக்கு பணி நிரந்தத்துக்கான ஆணையும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் துணை மேலாளர்கள் கோபாலகிருஷ்ணன், பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.