திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், 70 பவுன் நகைகள், ரூ. 10 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.
திண்டுக்கல் கோவிந்தராஜ் நகரைச் சேர்ந்தவர் அருளானந்தம். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
இவரது மகன் விக்டர் ஜோசப், மருமகள் ஜூலி வினிதா ஆகியோருடன், கோவிந்தராஜ் நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். ஜூலி வினிதா, அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், விக்டர் ஜோசப், ஜூலி வினிதா மற்றும் குடும்பத்தினருடன், நிலக்கோட்டை அடுத்துள்ள சிலுக்குவார்பட்டி பகுதியிலுள்ள புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழாவுக்கு செவ்வாய்க்கிழமை சென்றுள்ளனர்.
இதனிடையே தொழில் ரீதியாக வெளியிடங்களுக்கு சென்ற அருளானந்தம் இரவு 10 மணிக்கு வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது, வீட்டின் சாவி விக்டர் ஜோசப்பிடம் இருப்பதை அறிந்து, அதனை பெறுவதற்காக சென்றுள்ளார். பின்னர், சாவியை பெற்றுக்கொண்டு நள்ளிரவு 1 மணிக்கு வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது, வீடு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வீட்டினுள் சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 70 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 லட்சம் ரொக்கம் திருடு போயிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் அருளானந்தம் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இரவு 10 முதல் நள்ளிரவு 1 மணிக்குள் நிகழ்ந்த இந்த திருட்டு சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அட்டகாசமான வேலைவாய்ப்பு அறிவிப்பு... எய்ம்ஸ் நிறுவனத்தில் 2218 நர்சிங் அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

சி.வி. சண்முகம் விடுத்த சவால்! ஏற்பாரா எடப்பாடி பழனிசாமி?

கேலி பண்றீங்களா? எனக்கு இப்படித்தான் பேசத் தெரியும்! கோபமடைந்த அமைச்சர் மரியவில்சன்!

கடற்கரைகளில் இலவச வைஃபை வசதி! சென்னை மாநகராட்சி திட்டம்
விடியோக்கள்

சி.வி. சண்முகம் விடுத்த சவால்! ஏற்பாரா எடப்பாடி பழனிசாமி?


