FOLLOW US

ON GOOGLE DISCOVER

தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

விடாமல் உற்சாகக் குரல் கொடுத்த ரசிகர்கள்... கண்கலங்கிய ருக்மணி வசந்த்!

நடிகை ருக்மணி வசந்துக்கு சென்னையில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது...

ருக்மணி வசந்த்

Published On :25 ஆகஸ்ட் 2026, 12:38 pm IST

சென்னையில் டாக்ஸிக் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ருக்மணி வசந்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடிகர் யஷ் நடித்துள்ள திரைப்படம் டாக்ஸிக். 1940-களில் கோவாவை மையமாகக் கொண்ட ஆக்‌ஷன் த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ஆகஸ்ட் 26 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்திற்கான முன்வெளியிட்டு நிகழ்வு ஹைதராபாத்தைத் தொடர்ந்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று (ஆக. 24) நடைபெற்றது. நிகழ்வில் நடிகர் யஷ், இயக்குநர் கீது மோகன் தாஸ், ருக்மணி வசந்த் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பேச, நடிகை ருக்மணி வசந்த் மேடைக்கு வந்ததும் தமிழ் ரசிகர்கள் ஆரவாரமாக குரல் எழுப்பினர். உச்ச நடிகர்களுக்கு இணையாக ருக்மணிக்கு ரசிகர்களிடமிருந்து சப்தம் எழுந்தததால் படக்குழுவினரே ஆச்சரியப்பட்டனர்.

மேலும்,”உங்கள் அன்பைக் கண்டு அழுகையே வருகிறது; நான் பேசட்டுமா?” என ருக்மணி கேட்டதற்குப் பின்பே ரசிகர்கள் உற்சாகக் குரலைக் குறைத்தனர். ஒரு கன்னட நடிகைக்கு தமிழிலும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருப்பதால் இனி தமிழ்த் திரைப்படங்களிலும் ருக்மணியை அடிக்கடி பார்க்கலாம் எனத் தெரிகிறது.

Actress Rukmini Vasanth received a grand welcome when she attended the 'Toxic' event in Chennai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.