இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

சாலை ஆக்கிரமிப்பை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை

பழனியை அடுத்த பொருந்தல் கிராமத்தில் சாலை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

பழனியை அடுத்த பொருந்தல் கிராமத்தில் சாலை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
  பொருந்தல் கிராமத்திலிருந்து புளியம்பட்டி, ஓடைக்காடு, சண்முகம்பாறை பகுதிகளுக்கு செல்வதற்கு ஒரே சாலை தான் உள்ளது. 
பொருந்தல் கிராமத்திலிருந்து சண்முகம்பாறை, புளியம்பட்டி பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு இந்த வழியே தான் மாணவர்கள் சென்று வருகின்றனர். மேலும், விவசாயிகளும் உரங்கள், விளை பொருள்களை டிராக்டரில் இந்த வழியில் தான் கொண்டு செல்கின்றனர்.
 இந்நிலையில் தனியார் சிலர் இச்சாலையை இருபுறமும் கற்கள், முள்களை வைத்து சிறிது, சிறிதாக ஆக்கிரமித்து வருகின்றனர். 
இதுகுறித்து வருவாய்த்துறையினரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லையாம். 
எனவே, சாலை ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொருந்தல் கிராம மக்கள், விவசாயிகள் கோரிக்கை 
விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.