சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

நூற்பாலையில் இளம்பெண் மர்மச் சாவு: சிபிசிஐடி விசாரணை நடத்தக் கோரிக்கை

வேடசந்தூரில் தனியார் நூற்பாலையில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து சிபிசிஐடி விசாரணை

Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

வேடசந்தூரில் தனியார் நூற்பாலையில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டுமென சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சிஐடியு மாவட்டச் செயலர் கே.ஆர். கணேசன் புதன்கிழமை தெரிவித்துள்ளதாவது: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பகுதியில் தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வந்த விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த விஜயலட்சுமி(19), மர்மான முறையில்  செவ்வாய்க்கிழமை  உயிரிழந்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பஞ்சாலைகளில் தொடர்ந்து விதிமீறல் நடைபெறுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 25-க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். 
ஆனால், காவல்துறை முறையான விசாரணை நடத்தி தவறு செய்த ஆலை நிர்வாகத்தின் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
நூற்பாலை பிரச்னையில், தொழிலாளர் நலத் துறையும் தலையிடுவது இல்லை. இதன் மூலம், நூற்பாலை நிர்வாகங்களின் விதிமீறல்களுக்கு காவல்துறையும், தொழிலாளர் நலத் துறையும் துணை நிற்பதாகவே தோன்றுகிறது. 
பஞ்சாலை தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச  ஊதியம் வழங்கப்படுதில்லை. வெளிமாவட்டங்களை சேர்ந்த இளம் பெண்களின் உழைப்பு, கேம்ப் கூலி என்ற பெயரில்  சுரண்டப்படுகிறது. 
எதிர்காலத்தில் நூற்பாலைகளில் இளம் பெண்களின் மர்ம மரணங்களை தடுக்கும் வகையில், வேடசந்தூர் நூற்பாலை நிர்வாகத்தின் மீது சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.