தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

குடிநீர் கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அடுத்துள்ள பச்சமலையான்கோட்டை ஊராட்சிக்குள்பட்ட எஸ்.புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த

Updated On :9 ஜூலை 2018, 7:28 pm

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அடுத்துள்ள பச்சமலையான்கோட்டை ஊராட்சிக்குள்பட்ட எஸ்.புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் காலிக் குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனர்.       
    இதுதொடர்பாக அவர்கள் கூறியது: பச்சமலையான்கோட்டை ஊராட்சிக்குள்பட்ட 5 கிராமங்களுக்கு, எஸ்.புதுக்கோட்டை வழியாக காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் செல்கிறது. ஆனால், 1500 பேர் வசித்து வரும் எங்கள் கிராமம், காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. இதுதொடர்பாக நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் முறையிட்டபோது, எஸ்.புதுக்கோட்டை கிராமம் இணைக்கப்படும் என தெரிவித்தார். ஆனால், இணைப்பதற்கான நடவடிக்கை இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்து வரும் எங்கள் கிராமத்தை, காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இணைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
பிள்ளையார் நத்தம்:  இதேபோல், பிள்ளையார்த்தம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களும் முறையான குடிநீர் வசதி கேட்டு மனு அளிக்க வந்தனர். இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், எங்கள் பகுதிக்கு ஆத்தூர் காமராஜர் அணையிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்ற பின்னர், எங்கள் கிராமத்திற்கான குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. 
 மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால், நாங்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளோம். எனவே, ஆத்தூர் நீர்த்தேக்கத்திலிருந்து வழங்கப்படும் குடிநீரை, வாரத்திற்கு ஒருமுறையாவது வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.