பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பாலக்கோட்டில் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

பாலக்கோட்டில் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலினைப் பற்றி...

News image

தருமபுரியில் மக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்த முதல்வர் ஸ்டாலின்.

Updated On :15 ஏப்ரல் 2026, 4:43 am

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில், வீதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் சென்று மக்களை சந்தித்து, முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

தமிழ்நாட்டில் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், தேர்தல் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலரும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் முழுவீச்சில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின், மாநிலம் முழுவதும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தும், திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்த முதல்வர் ஸ்டாலின், இன்று (ஏப். 15) காலை நடைப்பயிற்சியின் போது மக்களிடம் ஓட்டு சேகரித்தார்.

வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

பாலக்கோடு திமுக வேட்பாளர் செந்தில்குமாருக்கு ஆதரவாக வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து அரசின் திட்டங்களை எடுத்துரைத்து பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலினுடன் அங்கிருந்தவர்கள் கைகுலுக்கி செல்பி எடுத்துக் கொண்டனர்.

வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

பாலக்கோடு நகரில் முக்கிய வீதிகள், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்டவைகளுக்கு நடந்தே சென்று, கோட்டை தெருவில் உள்ள இஸ்லாமிய மக்களை சந்தித்து நலம் விசாரித்தார். அங்கு ஒரு குழந்தைக்கு திராவிடன் என்றும் அவர் பெயர் சூட்டினார்.

அதைத்தொடர்ந்து ஸ்தூபி திடல், கடைவீதி, பேருந்து நிலையம், தக்காளிமண்டி வரை நடந்து சென்று பொதுமக்கள், வியாபாரிகள், பயணிகளைச் சந்தித்து திமுக சார்பில் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு அவர் பிரசாரம் மேற்கொண்டார்.

Summary

In the Palacode Assembly constituency of Dharmapuri district, Chief Minister Stalin visited streets and residential areas to meet the people and seek their votes.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.