பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கொடைக்கானல் அருகே குட்டி யானை சாவு

கொடைக்கானல் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த குட்டி யானையை, வனத் துறையினர் ஞாயிற்றுக்கிழமை மீட்டனர். 

News image
Updated On :9 ஜூலை 2018, 1:35 am

DIN

கொடைக்கானல் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த குட்டி யானையை, வனத் துறையினர் ஞாயிற்றுக்கிழமை மீட்டனர். 
    கொடைக்கானல் அருகே புலியூர் ஒத்தமர செட் வனப் பகுதியில் யானை இறந்து கிடப்பதாக, வனத் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், சம்பவ இடத்துக்கு மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி, கால்நடை மருத்துவர் ஹக்கிம் உள்பட 25-க்கும் மேற்பட்ட வனத் துறையினர் சென்றனர். 
அங்கு, பெண் குட்டி யானை ஒன்று இறந்து கிடந்ததை கண்டனர்.    ஐந்து வயதுடைய இந்த யானை இறந்து சுமார் 10 நாள்கள் இருக்கும் என்றும், இது நோயுற்று இறந்ததா அல்லது மர்மமான முறையில் இறந்துள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என, வனத் துறையினர் தெரிவித்தனர். 
   அதைத் தொடர்ந்து, மருத்துவர் ஹக்கிம் பிரேதப் பரிசோதனை நடத்திய பின், யானை அப்பகுதியிலேயே புதைக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.