கொடைக்கானல் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த குட்டி யானையை, வனத் துறையினர் ஞாயிற்றுக்கிழமை மீட்டனர்.
கொடைக்கானல் அருகே புலியூர் ஒத்தமர செட் வனப் பகுதியில் யானை இறந்து கிடப்பதாக, வனத் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், சம்பவ இடத்துக்கு மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி, கால்நடை மருத்துவர் ஹக்கிம் உள்பட 25-க்கும் மேற்பட்ட வனத் துறையினர் சென்றனர்.
அங்கு, பெண் குட்டி யானை ஒன்று இறந்து கிடந்ததை கண்டனர். ஐந்து வயதுடைய இந்த யானை இறந்து சுமார் 10 நாள்கள் இருக்கும் என்றும், இது நோயுற்று இறந்ததா அல்லது மர்மமான முறையில் இறந்துள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என, வனத் துறையினர் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து, மருத்துவர் ஹக்கிம் பிரேதப் பரிசோதனை நடத்திய பின், யானை அப்பகுதியிலேயே புதைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாயக்கனேரி மலை அரசுப் பள்ளி தரம் உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா்

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு: அரக்கோணம் பள்ளி மாணவி சிறப்பிடம்

மாட்டு வண்டியில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்

தென்காசி தொகுதியில் சுயேச்சையாக களம் காணும் விவசாயி!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

