பழனியில் வட்டார வேளாண்மைப்பொறியியல் பணிக்கூட்டுறவு மையத்தில் நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் அதிமுகவினர் மனுக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டதால் வியாழக்கிழமை திமுகவினர் பூட்டுப் போட்டு போராட்டம் நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கூட்டுறவு சங்க தேர்தலை முன்னிட்டு பல்வேறு கூட்டுறவு சங்கங்களிலும் வேட்புமனு தாக்கல் நடைபெற்றது.
அதிமுக, அமமுக, திமுக, கம்யூனிஸ்ட் கட்சியினர் ஏராளமானோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிமுகவினர் மனுக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டதாக பட்டியல் ஒட்டப்பட்டது. இதையடுத்து துணைப்பதிவாளர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
முறையாக பரிசீலனை செய்து சரியான பட்டியல் ஒட்டுவதாக தெரிவித்த நிலையில் இன்றும் அதிமுகவினரின் பெயர்கள் மட்டுமே ஒட்டப்பட்டது. இதையடுத்து புதன்கிழமை பழனி- திண்டுக்கல் சாலையில் உள்ள பழனி வட்டார வேளாண்மைப்பொறியியல் பணிக்கூட்டுறவு மையத்தை திமுக ஒன்றிய செயலாளர் பாண்டி தலைமையில் முற்றுகையிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட திமுகவினர் ஆளும் கட்சிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி மையத்தின் அலுவலகத்திற்கு தாங்கள் கொண்டு வந்த பூட்டை போட்டு போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் போராட்டம் நடத்திய திமுகவினரை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே மாதப் பலன்கள் - கன்னி

இருதரப்பு வர்த்தக மேம்பாடு குறித்து இந்தியா - பிரிட்டன் பேச்சுவார்த்தை!

மே மாதப் பலன்கள் - சிம்மம்

மே மாதப் பலன்கள் - கடகம்
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

