புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

உசிலம்பட்டியில் வயர்மேன் மீது தாக்குதல்: சக ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

உசிலம்பட்டியில் வயர்மேனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மின் வாரிய அலுவலகத்தில் சக ஊழியர்கள் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On :21 மே 2018, 7:02 pm

உசிலம்பட்டியில் வயர்மேனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மின் வாரிய அலுவலகத்தில் சக ஊழியர்கள் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டியை அடுத்த வாலாந்தூரைச் சேர்ந்தவர் ஜெயகிருஷ்ணன். வயர்மேனான இவரிடம் வாலாந்தூரைச் சேர்ந்த அக்கினி மகன் உக்கிரபாண்டி, அடிக்கடி ஏன் மின்தடை ஏற்படுகிறது' எனக் கேட்டு, கடந்த சனிக்கிழமை தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் தகாத வார்த்தைகளால் திட்டி, கல்லால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து வாலாந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உக்கிரபாண்டி மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இந்நிலையில், வயர்மேன் ஜெயகிருஷ்ணன் தாக்கப்பட்டதை கண்டித்தும், உக்கிரபாண்டி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உசிலம்பட்டி மின்சார வாரிய உற்பத்தி மற்றும் மின் பகிர்மான அலுவலகத்தில் உசிலம்பட்டி மற்றும் வாலாந்தூர் மின்வாரிய ஊழியர்கள் 50-க்கும் மேற்பட்டோர்
திங்கள்கிழமை காலை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 2 மணி நேரம் இப்போராட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.